Published : 07 Jan 2021 03:15 AM
Last Updated : 07 Jan 2021 03:15 AM

திண்டுக்கல்லில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பில், பணி நிரந்தரம் கோரி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செவிலியர் சங்க மாவட்டத் தலைவர் கலா தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் சித்ரா வரவேற்றார். மாவட்டச் செயலாளர் கலைச்செல்வி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். எம்.ஆர்.பி. செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x