திண்டுக்கல்லில் சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ.,  அமைப்பினர்.
திண்டுக்கல்லில் வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ., அமைப்பினர்.
Updated on
1 min read

மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி சி.ஐ.டி.யூ., சார்பில் திண்டுக்கல் தலைமை தபால்நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ., மாவட்டத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கணேசன், மாவட்டப் பொருளாளர் தனசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

டெல்லியில் வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in