புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி விருதுநகர் மாவட்டத்தில் நடந்த மறியலில் 243 பேர் கைது

விருதுநகரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ நிர்வாகிகள்.
விருதுநகரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ நிர்வாகிகள்.
Updated on
1 min read

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் சிஐடியூ சார்பில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 243 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும், மின்சாரச் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரியும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கும் போக்கைக் கைவிடக்கோரியும் கரோனா காலத்தில் வேலையிழந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.7,500 வழங்கக் கோரியும் சிஐடியூ சார்பில் சாலைமறியல் போராட்டம் நடந்தது.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் எதிரே நடந்த போராட்டத்துக்கு சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். சிஐடியூ போக்குவரத்துத் தொழிலாளர் சம்மேளன நிர்வாகி வெள்ளத்துரை முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 54 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய இடங்களிலும் சிஐடியூ சார்பில் நடந்த மறியல் போராட்டத்தில் 243 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in