சிறுமி பாலியல் வன்கொடுமைஇளைஞருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமைஇளைஞருக்கு 10 ஆண்டு சிறை
Updated on
1 min read

கடலூர் சுப்ராயலு நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த 2018- ஆம் ஆண்டு கடத்தி செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக் கப்பட்டார். இதுதொடர்பாக கடலூர் அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பண்ருட்டியைச் சேர்ந்த விஜயகுமார் (26) என்பவரை இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி கைது செய்தார்.

இந்த வழக்கு கடலூர் போக்ஸோ சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி நேற்று, குற்றவாளி விஜயகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக கலைச்செல்வி ஆஜரானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in