Published : 06 Jan 2021 03:14 AM
Last Updated : 06 Jan 2021 03:14 AM

பணி நிறைவு பெற்று திரும்பிய ராணுவ வீரருக்கு பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டம், திரு வாடானை அருகே உள்ள கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின்(45). இவர் கடந்த 24 ஆண்டுகளாக ராணுவத்தில் பல்வேறு மாநில எல்லைகளில் பணியாற்றினார். பணி நிறைவு பெற்று நேற்று சொந்த ஊர் திரும்பினார்.

அவர் நாட்டுக்கு ஆற்றிய சேவையைப் பெருமைப்படுத்தும் வகையில் கடம்பாகுடி, கோனேரிக்கோட்டை உள்ளிட்ட கிராம இளைஞர்கள், ராமநாதபுரம் மருது சீமைப் பட்டாளத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் திருவாடானை பேருந்து நிலையத்தில் ராணுவ வீரர் ஸ்டாலினுக்கு நேற்று மாலை அணிவித்து வரவேற்றனர்.

மேலும் பட்டாசு வெடித் தும், கேக் வெட்டியும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்வு அங்கிருந்தவர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x