கிருஷ்ணகிரி இசைக்கலைஞர்கள் கரோனா விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரியில் இசைக்கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில், கரோனா விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கிருஷ்ணகிரியில் இசைக்கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில், கரோனா விழிப்புணர்வு பேரணி நடந்தது.
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் இசைக்கலைஞர் கள் நலச்சங்கம் சார்பில் கரோனா விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்ட நியூ கிராமிய பேண்டு இசைக் கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில், கரோனா விழிப்புணர்வு பேரணி, சங்க 13-ம் ஆண்டு தொடக்க விழா, தியாகராஜ சுவாமி ஆராதனை விழா என முப்பெரும் விழா நடந்தது. முன்னதாக நேற்று காலை கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரர் கோயிலில் தியாகராஜ சுவாமி ஆராதனை மங்கள இசையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு, பழையபேட்டை காந்திசிலை அருகில் கரோனா விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.

இதில் 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பேண்டு, நாதஸ்வரம், பம்பை கருவிகளைக் கொண்டு வாசித்தபடி கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி ஊர்வலமாக சென்றனர். கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரர் கோயிலில் ஊர்வலம் முடிந்தது. தியாகராஜ சுவாமி ஆராதனை விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், சாக்ஸபோன் கலைஞர் சங்க மாவட்டத் தலைவர் விஸ்வநாதன், மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in