Published : 05 Jan 2021 08:22 AM
Last Updated : 05 Jan 2021 08:22 AM

அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்தால் ஓர் ஆண்டு சிறை: ஆட்சியர் எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சாலையை பயன்படுத்துவோரின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் சாலைகள், நடைபாதைகளில் பேனர்கள் அமைக்கக் கூடாது என ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவின்படி இம்மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பேனர்கள், அட்டைகளின் உரிமையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொண்டு, ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பதாகைகள் தொடர்பாக 9384056215 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x