வீட்டின் பூட்டை  உடைத்து  40 பவுன் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் திருட்டு

Published on

காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் பாபாஜி நகரில் வசிப்பவர் சண்முகப்பிரியன். இவர் தனது குழந்தையின் மருத்துவப் பரிசோதனைக்காக இரு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றார். மீண்டும் நேற்று சண்முகப்பிரியன் வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த பாலுசெட்டிசத்திரம் காவல் நிலைய போலீஸார் தனிப்படை அமைத்து, திருட்டு நடந்த வீட்டின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in