புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு காரில் சாராயம் கடத்தல்

கடலூரில் காரில்  சாராயம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூரில் காரில் சாராயம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Updated on
1 min read

கடலூரில் காரில் சாராயம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் எஸ்பி  அபிநவ் உத்தரவின் பேரில் கடலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் தாரகேஸ்வரி, சிறப்பு தனிப்படை உதவிஆய்வாளர் சுதாகர், ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் நேற்று கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த பதிவெண் இல்லாத காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 5 பிளாஸ்டிக் பைகளில் தலா 30 லிட்டர் வீதம் 150 லிட்டர்சாராயம் புதுச்சேரியில் இருந்துகடத்தி வரப்பட்டது தெரியவந்தது. காரில் இருந்த கடலூர் திருப்பாதிரிபுலியூர் குறவன்பாளையம் சாத்தங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜா மனைவி வனிதா(33), அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சிவமணி (31) ஆகிய 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் கார் மற்றும் 150 லிட்டர் சாரயத்தையும் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in