

தற்போது, டெல்டா மாவட்டத்தில் மழை பெய்ததால் பாசனத்துக்கு நீர் தேவை குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று காலை முதல் 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 1,106 கனஅடியாகவும், நீர் மட்டம் 104.96 அடியாகவும், நீர் இருப்பு 71.41 டிஎம்சி-யாகவும் இருந்தது.