பழநி பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா? சீசன் தொடங்க உள்ளதால் விபத்து உயிரிழப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

பழநி பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா? சீசன் தொடங்க உள்ளதால் விபத்து உயிரிழப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை
Updated on
1 min read

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்று பழநிமலை. ஆறுபடை வீடுகளில் பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் ஒரே ஸ்தலமாகவும் விளங்குகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நேரங்களில் மட்டுமே பழநி மலைக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றுவந்த நிலை மாறி, கூட்ட நெரிசல்உள்ளிட்ட சிக்கல்களை தவிர்க்கும்வகையில் தங்களுக்கு உகந்த நேரங்களில் பாதயாத்திரை செல்லும் போக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் டிசம்பர் தொடங்கி கோடை காலம் அக்னி நட்சத்திரக் கழிவு எனப்படும் நாட்களான அக்னி வெயில் நிறைவு பெறும் மே மாதம் வரை 6 மாதங்களுக்கு இந்நிகழ்வு தொடர்கிறது. குறி்ப்பாக திருப்பூர்,கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். நடப்பாண்டு பாதயாத்திரை சீசன் தொடங்க உள்ளது.

வாகனங்கள் மோதி உயிரிழப்பு

வரிசைப்படுத்தி அனுப்ப வேண்டும்

நடப்பாண்டு கரோனா பாதிப்புக்குமத்தியில் பாதயாத்திரை, அபிஷேகம், வழிபாடு குறித்து எந்தவித வரைமுறை அறிவிப்புகளும், இதுவரைபொதுவாக தெரிவிக்கப்பபடவில்லை. இருப்பினும், பக்தர்கள்பாதயாத்திரை செல்ல தொடங்கிவிட்டனர்.

அனைவரும் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவதால், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், காவல் துறையினர் சார்பில் ஒளிரும் பட்டைகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்குதல், ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் பக்தர்களை வரிசைப்படுத்தி அனுப்புதல் உள்ளிட்ட பணிகளை தொய்வின்றி செய்ய வேண்டும்" என்றார்.

மேலும், பக்தர்கள் தங்குவதற்கான ஓய்விடங்களை சாலையோகமாக அமைக்க வேண்டும். தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் பக்தர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகின்றன.

ஒளிரும் பட்டைகள் வழங்கப்படும்

வரைமுறைகள் வெளியிடப்படவில்லை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in