Published : 04 Jan 2021 03:20 AM
Last Updated : 04 Jan 2021 03:20 AM

திருக்காலிமேடு பகுதிமக்கள் இணைந்துவேகத்தடை அமைப்பு

திருக்காலிமேடு பகுதியில் உள்ள சாலைகளில் அதிவேகமாக செல்லும் மோட்டார் சைக்கிள்களால் விபத்துகள் தொடர்வதால், குடியிருப்பாளர்கள் இணைந்து பள்ளத்தெரு சாலையில் வேகத்தடை அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் பெரு நகராட்சியின் 27-வது வார்டு திருக்காலிமேடு பகுதியில் நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும், நகரில் குப்பை சேகரிக்கும் கனரக வாகனங்கள் திருக்காலிமேடு வழியாக திருவீதி பள்ளம் பகுதியில் உள்ள குப்பை கிடங்குக்கு சென்று திரும்புகின்றன.

மேற்கண்ட சாலைகளில் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால், அவ்வப்போது விபத்துகள் நிகழ்வதாக கூறப்படுகிறது. பள்ளத் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றில், சிறுவன் சிக்கி காயமடைந்தார்.

இதையடுத்து, அப்பகுதி குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்து அச்சாலையில் வேகத்தடை அமைக்கும் பணிகளில் நேற்று ஈடுபட்டனர். இதுபோல், மற்ற பகுதிகளில் விரைந்த வேகத்தடை அமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x