திருவண்ணாமலை தேரடி வீதியில் உள்ள சத்திரத்தை மூடியதால் சாலை மறியல் காவல் துறையினர் பேச்சுவார்த்தை

திருவண்ணாமலை தேரடி வீதியில் சத்திரத்தை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக ஒரு தரப்பினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை தேரடி வீதியில் சத்திரத்தை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக ஒரு தரப்பினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

தி.மலை உள்ள ஒரு சத்திரத்தை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள மோதலால் ஒரு தரப்பினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை தேரடி வீதியில் ஒரு சமுதாயத்துக்கு சொந்தமான சத்திரம் உள்ளது. இதனை நிர்வாகம் செய்ய, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்வு செய்யப் படுவது வழக்கம். தற்போதைய நிர்வாகிகள் பதவிக்காலம் கடந்தாண்டு முடிந்துள்ளது.

பின்னர், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவில்லை. கரோனா தொற்று பரவல் காரண மாக, நிர்வாகிகள் தேர்தல் நடை பெறவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டத்துக்கு ஒரு தரப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதன் எதிரொலியாக, சத்திரத்தை மற்றொரு தரப்பினர் நேற்று மூடினர். இதற்கு எதிர்ப்பு தெரி வித்து பொதுக்குழுக் கூட்டத் துக்கு ஏற்பாடு செய்தவர்கள், சத்திரத்தின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, சத்திரத்தை திறந்தனர்.

இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு, சத்திரத்தில் கூட்டத்தை நடத்தினர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in