பாதயாத்திரை சென்ற பக்தர் உயிரிழப்பு

பாதயாத்திரை சென்ற பக்தர் உயிரிழப்பு
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் கெம்மியம்பட்டியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (22). இவர், தனது நண்பர்களுடன் பழநிக்கு நேற்று முன்தினம்பாதயாத்திரை பயணம் மேற்கொண்டார். ஈரோட்டிலிருந்து காங்கயம், தாராபுரம் வழியாக பழநி நோக்கி சென்று கொண்டிருந்தார். காங்கயம் அருகே தாராபுரம் சாலை துண்டுக்காடு பகுதியில் நேற்று அதிகாலை சென்றபோது, காங்கயத்திலிருந்து தாராபுரம் நோக்கி வந்த லாரி மோதி படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் நவீன்குமாரை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், நவீன்குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக காங்கயம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in