திருவள்ளுர் மாவட்ட பகுதிகளில் விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

திருவள்ளுர் மாவட்ட பகுதிகளில் விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

Published on

திருவள்ளூர் மாவட்டத்தில் நாகதங்களைச் சேர்ந்தவர் ராஜகோபால் மனைவி கோவிந்தம்மாள் (60). இவர் நேற்று முன்தினம் சாலையைக் கடந்தபோது, கார் மோதியதில் படுகாயமடைந்தார். கோவிந்தமாளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருவாலங்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து,கார் ஓட்டுநரை கைது செய்தனர்.

இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம், சுமைதாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ்குமார். இவர் நேற்றுமுன்தினம் காலை இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றார். மப்பேடு அடுத்த கல்லம்பேடு எடைமேடை அருகே சென்றபோது, சாலையில் திடீரென மாடு குறுக்கே வந்துள்ளது.

இதில் நிலை தடுமாறி இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் தனுஷ்குமார் மின்மாற்றி மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து, மப்பேடு போலீஸார் விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in