Published : 03 Jan 2021 03:22 AM
Last Updated : 03 Jan 2021 03:22 AM

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் சமூகநலத் துறையின் சார்பில் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், ஒருகுழந்தைக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 2 பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிதியுதவியைப் பெற, 2 பெண் குழந்தைகளின் தாய் 35வயதுக்குள் குடும்ப அறுவைசிகிச்சை செய்திருப்பதற்கான மருத்துவச் சான்றினை இணைப்பதுடன், ஆண்டு வருமானம் ரூ.72ஆயிரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தகுந்த ஆவணங்களை திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூகநலத் துறை பணியாளர்களிடம் அளிப்பதுடன், இ-சேவை மையத்திலும் பதிவு செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x