Published : 02 Jan 2021 03:25 AM
Last Updated : 02 Jan 2021 03:25 AM

மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த ஊழியர் மரணம்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அருகே யுள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர் சண்முகம் (48). இவர் மின்வாரிய ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தார். நேற்று அப்பகுதியில் மின் கம்பத்தில் தொங்கிய தொலைக்காட்சி கேபிள் வயரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மயங்கிய அவர், மின்கம்பத் திலேயே தொங்கினார். இதுபற்றி தகவலறிந்த திருஉத்தரகோசமங்கை போலீ ஸார் சண்முகத்தின் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சண்முகம் ஏற் கெனவே உயிரிழந்து விட்ட தாகத் தெரிவித்தனர்.

போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். சண்முகத் துக்கு மனைவி, 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x