ராமநாதபுரம் அருகே வாகனம் மோதி இளைஞர் மரணம்

ராமநாதபுரம் அருகே வாகனம் மோதி இளைஞர் மரணம்
Updated on
1 min read

ராமநாதபுரம் அருகே முத்துவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்குசாமி மகன் அருண் (27). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கேசவன் (25) என்பவரும் இரு சக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் இரவு சத்திரக்குடிக்குச் சென்று கொண்டிருந்தனர்.

கீழக்கோட்டை அருகே சென்றபோது இவர்களது இரு சக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டுச் சென்றது. இதில்பலத்த காயமடைந்த இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அருணைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கேசவன் சிகிச்சை பெற்று வருகிறார். சத்திரக்குடி போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in