Published : 01 Jan 2021 07:54 AM
Last Updated : 01 Jan 2021 07:54 AM

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படைவீரர்களுக்கு அமைச்சர் பாராட்டு

சிவகங்கை அருகே இலுப்பகுடி இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைப் பயிற்சி மையத்தில், விழிப்புணர்வு சைக்கிள் பயணம் செய்து திரும்பிய வீரர்கள்.

சிவகங்கை

சிவகங்கை அருகே இலுப்பகுடி பயிற்சி மையத்தில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை டிஐஜி ரன்வீர்சிங் தலைமையிலான

17 வீரர்கள், ஒற்றுமையாக வாழ வேண்டும், உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி சைக்கிள் பயணம் சென்றனர்.

டிச.30-ல் கேரளாவில் உள்ள வண்டிப்பெரியாரில் தங்களது பயணத்தை அவர்கள் முடித்தனர். அவர்களுக்கான பாராட்டு விழா இலுப்பகுடி இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைப் பயிற்சி மையத்தில் நடந்தது.

கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் சைக்கிள் விழிப்புணர்வுப் பயணம் மேற்கொண்ட டிஐஜி ரன்வீர் சிங் உள்ளிட்ட 17 வீரர்களைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x