தூய்மை பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூய்மை பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Updated on
1 min read

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் கடந்த 16-ம் தேதி முதல் நேற்று வரை தூய்மை பாரதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் நா.அகிலா தலைமை வகித்தார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பசுமை காப்பதற்காக மரக் கன்றுகள் நடுதல், கிராமங்களில் தூய்மை பேணுதல், மட்கும், மட்காத குப்பை பிரித்தெடுத்தல், மட்கும் உரம் தயாரித்தல் மற்றும் நெகிழிப் பொருட்களின் உபயோகத்தை தவிர்த்தல், பார்த்தீனியம் களை மேலாண்மை, கரோனா தடுப்பு முறை உள்ளிட்டவை குறித்து செயல் விளக்கம் அளித்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வேளாண் அறிவியல் நிலைய அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in