ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸார் மனு

ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸார் மனு
Updated on
1 min read

மானூர் பெரியகுளத்துக்கு தண்ணீர் வர நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அக்கட்சியின் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில், காங்கிரஸ்கட்சியினரும், விவசாயிகளும், காய்கறிமாலை அணிந்தும், கருகிய நெல் நாற்றுகளுடனும் வந்து அளித்த மனு விவரம்:

திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு பிரதான கால்வாய் 1 மற்றும் 2-வது ரீச்சில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்பகுதிகளில் தற்போது நெல் நடவு செய்யப்பட்டு, பயிர்களுக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மணிமுத்தாறு அணையில் தற்போது 110 அடி தண்ணீர் இருக்கும் நிலையில் விவசாயத்துக்கு போதுமான தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மானூர் பெரியகுளத்துக்கு தண்ணீர்வர நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in