Published : 31 Dec 2020 03:19 AM
Last Updated : 31 Dec 2020 03:19 AM

திண்டுக்கல்லில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கட்டணம் அதிகம் வசூலிக்கும் புகைச்சான்று மையத்தின் உரிமத்தை ரத்து செய்யக் கோரி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து ஆணையரின் உத்தரவை மீறி புகைச்சான்று, பிரதிபலிப்பான் ஸ்டிக்கருக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, புகைச் சான்று மையத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை சி.ஐ.டி.யூ., ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகையிட வந்தனர். ஆனால், போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவகலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யூ., ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். அதிக கட்டணம் வசூலிக்கும் புகைச்சான்று மையத்தின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x