தீப்பற்றி தீப்பெட்டி தொழிலாளி உயிரிழப்பு

தீப்பற்றி தீப்பெட்டி தொழிலாளி உயிரிழப்பு
Updated on
1 min read

விருதுநகர் அருகே கழிவு தீப்பெட்டிகளைக் குப்பையில் கொட்டியபோது திடீரென தீப்பற்றியதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

காரியாபட்டி அருகே உள்ள திம்மன்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (57). விருதுநகர் அருகே மல்லாங்கிணறு பகுதி சூரம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் தீப்பெட்டி ஆலை யில் பணியாற்றி வந்தார்.

ஆலையிலிருந்த கழிவு தீக்குச்சிகள் மற்றும் தீப்பெட்டிகளை குப்பைத் தொட்டியில் கொட்டினார். அப்போது திடீரென தீப்பற்றி கருப்பசாமி உடலில் தீ பரவியதில் அவர் பலத்த காய மடைந்தார்.

விருதுநர் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வந்த கருப்பசாமி ,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மல்லாங்கிணறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in