தொழிலாளி உயிரிழப்பு

தொழிலாளி உயிரிழப்பு
Updated on
1 min read

விருதுநகர் அருகே கழிவு தீப்பெட்டிகளைக் குப்பையில் கொட்டியபோது தீப்பற்றியதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

காரியாபட்டி அருகே உள்ள திம்மன்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (57). விருதுநகர் அருகே மல்லாங்கிணறு பகுதி சூரம்பட்டியில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வந்தார். ஆலையிலிருந்த கழிவு தீக்குச்சிகள் மற்றும் தீப்பெட்டிகளை குப்பைத் தொட்டியில் கொட்டினார். அப்போது திடீரென தீப்பற்றி கருப்பசாமி உடலில் தீ பரவியதில் பலத்த காய மடைந்தார். விருதுநகர் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கருப்பசாமி சிகிச்சை பலனின்றி உயி ரிழந்தார். மல்லாங்கிணறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in