அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
Updated on
1 min read

அவ்வையார் விருத்துக்கு பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெண்களின் முன்னேற்றத் துக்கு சிறந்த சேவை புரிந்தமைக்கு 2020-2021-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருது மகளிர் தினத்தில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது பெறுவதற்கு தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணிபுரிபவராக இருக்க வேண்டும்.

விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள், தங்களைப பற்றிய பயோ-டேட்டா ஒரு பக்கம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) இரண்டு பாஸ்போர்ட் புகைப் படம், தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை இன்று (30-ம் தேதி) மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in