Published : 29 Dec 2020 03:15 AM
Last Updated : 29 Dec 2020 03:15 AM

செங்கை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: அதிகாரிகள் கவனிப்பார்களா?

செங்கல்பட்டு: தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு மைக்ரானுக்குக்கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் தடை சமூக மற்றும் இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கடைகள், ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதித்தனர். கெடுபிடி அதிகரித்ததால் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தது. தற்போது அதிகாரிகள் சோதனை செய்வது குறைந்து, பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "செங்கை மாவட்டத்தில் மீன், இறைச்சி கடை உள்ளிட்ட பல இடங்களில் வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகளில்தான் பொருட்களை வழங்குகின்றனர். ஓட்டல்களில் பிளாஸ்டிக் பைகளிலேயே உணவுப் பொருட்களை கொடுக்கின்றனர். இதனால் மீண்டும் பிளாஸ்டிக் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு கேடுதரும் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வழங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x