Published : 29 Dec 2020 03:15 AM
Last Updated : 29 Dec 2020 03:15 AM

அய்யம்பாளையத்தில் மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி துரைபாண்டி (53). இவர், அதே பகுதியில் உள்ள சங்கர் என்பவரது தோப்பில் தென்னை மரத்தில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார். வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பட்டிவீரன்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x