திருப்பத்தூர் அருகே பானிபூரி வியாபாரி வீட்டில்35 பவுன் நகைகள் திருட்டு

திருப்பத்தூர் அருகே பானிபூரி வியாபாரி வீட்டில்35 பவுன் நகைகள் திருட்டு
Updated on
1 min read

திருப்பத்தூர் அருகே பூட்டி யிருந்த பானிபூரி வியாபாரி வீட்டில் 35 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த மரிமானிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (53). இவர், திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் பகுதியில் பானிபூரி கடை நடத்தி வருவதால் தனது குடும்பத்தாருடன் அங்கேயே தங்கியுள்ளார். வாரத்துக்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

அதன்படி, மரிமானிக்குப்பம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சுந்தர் நேற்று முன்தினம் இரவு வந்தார்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன.

பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் சுந்தர் புகார்செய்தார். அதன்பேரில், திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலு மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in