விருதுநகர் அருகே கிராம மக்கள் உண்ணாவிரதம்

விருதுநகர் அருகே கிராம மக்கள் உண்ணாவிரதம்
Updated on
1 min read

விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியில் நிலத்தடி நீரைப் பாதிக்கும் விதமாகவும், வீடுகள், மருத்துவமனைக்கு ஆபத்து ஏற்படும் விதமாகவும் செயல்பட்டுவரும் மண் குவாரி மற்றும் கிரஷரை மூடக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்ட விவசாய அணித்தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். பாஜக மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் வெற்றிவேல், விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் கஜேந்திரன், பாஜக சட்டப்பேரவைத் தொகுதி பொதுச்செயலாளர் பொன் ராமன், விவசாய அணி பொதுச் செய லாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எரிச்சநத்தம், நடையனேரி, புதுப்பட்டி, அம்பேத்கர் காலனி, லட்சுமிபுரம், குமிளங் குளம், கொத்தனேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற் றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in