Published : 25 Dec 2020 03:16 AM
Last Updated : 25 Dec 2020 03:16 AM

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து ஆட்சியர் ஜான் லூயிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

காட்டாங்கொளத்தூர் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ,மாலதி, காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணியில் இருந்த இரா. சாய்கிருஷ்ணன் காட்டாங்கொளத்தூர் கிராம ஊராட்சிவட்டார வளர்ச்சி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருக்கழுக்குன்றம் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் இரா.உமா, அச்சிறுப்பாக்கம் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கிருந்த எஸ்.பிரகாஷ்பாபு மதுராந்தகம் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கிருந்த தண்டபாணி திருக்கழுக்குன்றம் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x