கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் கடைக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் கடைக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி நகரில், பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் மதுபாட்டில்களை வாங்குவதற்கு காலை முதலே அப்பகுதியில் காத்தி ருப்பதால், கூட்டம் ஏற்படுகிறது.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சமூக இடைவெளி கடைபிடித்தலும் தவிர்க்கப்படுகிறது.

பெண்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியை கடந்து செல்ல மிகவும்சிரமத்திற்கு ஆளாகின்றனர். அப்பகுதி யில் விபத்து நேரிடுவதாலும் டாஸ்மாக்கடையை அங்கிருந்து அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏழுமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. பின்னர் கள்ளக்குறிச்சி வட்டாட்சி யரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in