

திருப்பூரில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், அமராவதி சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்புகொள்முதல் செய்த விவசாயிகளுக்கு ரூ.5.75 கோடி நிலுவை வைத்துள்ளதாக திருப்பூர் மாவட்ட விவசாயிகள் புகார் அளித்தனர்.
திருப்பூர் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் குறைகளை தெரிவித்து பேசியதாவது:
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம், எங்களுக்கு ரூ.5.75 கோடி தொகை பாக்கி வைத்துள்ளது. கரும்பு பயிரிடும் பரப்பு அதிகரித்த நிலையில், விவசாயிகளிடம் போடப்படும் ஒப்பந்தம் என்பது ஆலை நிர்வாகத்திடம் குறைவாக உள்ளது. இதனால் தனியார் கரும்பு ஆலையை விவசாயிகள் நாடுகின்றனர். ஆலையை முறையாக பராமரிக்காததால், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் கடந்த 4 முதல் 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையுள்ளது. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உரிய நேரத்தில் அரவையை தொடங்க வேண்டும். பதிவு செய்த அனைத்து விவசாயிகளிடமும் கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும். கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
ஆவினில் பணம் நிறுத்திவைப்பு
வட்டமலைக்கரைக்கு தண்ணீர்