6 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

6 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
Updated on
1 min read

திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போலீஸார், காங்கயம் சாலை கருப்பராயன் கோயில் முன் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக சென்ற காரை நிறுத்தி விசாரித்ததில், காரை ஓட்டி வந்தவர் தென்காசி மாவட்டம் மாதாபுரம் புலவனூரை சேர்ந்த எஸ்.ஆல்வின்ராஜ் (30) என்பதும், திருப்பூரில் ராக்கியாபாளையம் பிரிவு வி.ஜி.வி.கார்டன் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது.

சட்டவிரோதமாக விற்பனை செய்ய கஞ்சா கடத்தி வந்ததும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 5.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in