புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
Updated on
1 min read

திருப்பூர் மாநகர் தெற்கு காவல்நிலைய போலீஸார், தென்னம் பாளையம் சந்தைபேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சந்தேகத்துக்குரிய வகையில் கார்களுடன் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.

இதில், திருப்பூர் ராதா நகரைச் சேர்ந்த கெவில் பட்டேல் (25),மொத்தமாக புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்து, அருள்புரத்தை சேர்ந்த சரவணன் (35) என்பவருக்கு அளிக்க இருந்தது தெரியவந்தது.

இருவரையும் கைதுசெய்த போலீஸார், 2 கார்கள் மற்றும் 60 கிலோ புகையிலைபொருட்களை பறிமுதல் செய்த னர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in