மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம், தாடிக் கொம்பு அருகே அழகர் சிங்கம் பட்டி நந்தகுமார் என்பவர் கட்டிவரும் வீட்டில் கட்டிட மேற் கூரைப் பணி நடைபெற்றது.

இதில் முள்ளிப்பாடி அருகே செட்டியபட்டி ரவி (55), சுரேஷ் (58), கோபி (30), மணி (20) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். அப்போது கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில் ரவி உயிரிழந்தார். இவரைக் காப்பாற்றச் சென்ற சுரேஷ், கோபி மணி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்து திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in