திமுக பிரமுகர் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்

திமுக பிரமுகர் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்
Updated on
1 min read

திமுக பிரமுகர் கொலை வழக்கில் இருவர் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

குமாரபாளையம் காவேரி நகர் பூசாரி காட்டைச் சேர்ந்தவர் திமுக 1-வது வார்டு செயலாளர் சரவணன் (41). இவர் கடந்த 20-ம் தேதி இரவு 11 மணியளவில் அதே பகுதியில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் சரவணனை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

இதை தடுக்க முற்பட்ட சரவணனின் நண்பர்கள் பிரபாகரன் (46), முரளிதரன் (24) ஆகிய இருவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த குமாரபாளையம் காவல் துறையினர் தலைமறைவான மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் சரவணன் கொலை வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு நீதிமன்றத்தில் குமாரபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ், கோவிந்தராஜன் ஆகிய இருவரும் சரணடைந்தனர். இருவரையும் குமாரபாளையம் காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in