பெருந்துறை சமையல் எண்ணெய் ஆலையில் தீ விபத்து

பெருந்துறை சமையல் எண்ணெய் ஆலையில் தீ விபத்து
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த வாய்க்கால் மேடு பகுதியில் பொன்னுசாமி என்பவருக்குச் சொந்தமான சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று முன் தினம் பணி முடித்து தொழிலாளர்கள் சென்ற நிலையில், நேற்று காலை ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வெளியிடங்களுக்கு அனுப்ப தயார் நிலையில் இருந்த எண்ணெய் பீப்பாய்களுக்கும் தீ பரவி, கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

ஈரோடு மற்றும் சென்னிமலை தீயணைப்பு நிலையங்களில் இருந்து கூடுதல் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மின் கசிவு காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in