பாளை. அருகே பெண் கொலை

பாளை. அருகே பெண் கொலை
Updated on
1 min read

பாளையங்கோட்டை அருகே உள்ள நொச்சிகுளம் கிழக்கு தெருவைச் சேர்ந்த கோபால் என்பவரது மனைவி மாரியம்மாள்(60). இவருக்கும் இவரது உறவினர் முத்து என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. ஏற்கெனவே மாரியம்மாளை தாக்கியதாக முத்து மீது சிவந்திப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் மாரியம்மாள் மீண்டும் தாக்கப்பட்டார். தடுக்க முயன்ற அவரது மகன் சண்முகராஜ், உறவினர் மனோரம்மாள் ஆகியோரும் தாக்கப்பட்டனர். காயமடைந்த மூவரும் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் உயிரிழந்தார். சிவந்திப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in