Published : 21 Dec 2020 03:15 AM
Last Updated : 21 Dec 2020 03:15 AM

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்தப் போராட்டத்துக்கு தாலுகா பொருளாளர் சுமதி தலைமை வகித்தார். வார்டு உறுப்பினர் முத்துமாரி, தாலுகா தலைவர் வெங்கடேஷ்வரி, தாலு காச் செயலாளர் ஆரோக்கிய நிர்மலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், விறகு அடுப்பை மூட்டி சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம்

சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதற்கு நகரச் செயலர் மேரி தலைமை வகித்தார்.

இப்போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சுகந்தி விளக்க உரையாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x