தென்காசியில் தமுமுக ஆர்ப்பாட்டம்

தென்காசியில் தமுமுக ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் அபாபில் மைதீன் தலைமை வகித்தார். நகர பொருளாளர் பொன்னானி சேட் வரவேற்று பேசினார்.

தமுமுக துணை பொதுச் செயலாளர் உஸ்மான்கான், மாநிலச் செயலாளர் நயினார் முஹம்மது, விவசாயிகள் சங்க மாவட்ட இணைச் செயலாளர் வேல்மயில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் டேனி அருள்சிங், மார்க்சிஸ்ட் வட்டாரக்குழு உறுப்பினர் பால்ராஜ், தமிழ் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல், பண்பொழியில் தமுமுக மாவட்ட துணை செயலாளர் செய்யது அலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் மைதீன் சேட்கான், தமுமுக மாவட்டத் தலைவர் முகம்மது யாகூப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in