Published : 20 Dec 2020 03:14 AM
Last Updated : 20 Dec 2020 03:14 AM

பிற்படுத்தப்பட்ட மாணவ – மாணவியர்கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பு மாணவ - மாணவியருக்கு இலவச கல்வித் திட்டத்தின்கீழ், கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிறபடிப்பினருக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ - மாணவியர் இதற்கான விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்விநிறுவனங்களிலேயே பெற்று பூர்த்திசெய்து அங்கேயே சமர்ப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிச.31-ம் தேதி கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x