

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஏழை விவசாயிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை அருகே ஒத்தை ஆலங்கு ளம் கிராமத்தில் நடந்தது. இதில் 166 பேருக்கு ஆடுகள் வழங் கப்பட்டன.
நிகழ்ச்சியில் கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் எம்.எஸ்.சரவணன், கால்நடை உதவி மருத்துவர்கள் வசுமதி, விஜிபிரியா, கால்நடை ஆய்வாளர் சசிரேகா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஜானிபாஷா, ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.