ஓய்வூதிய ஆணையை தாமதமின்றி வழங்க கோரிக்கை

ஓய்வூதிய ஆணையை தாமதமின்றி வழங்க கோரிக்கை
Updated on
1 min read

குடும்ப ஓய்வூதிய ஆணையை கால தாமதமின்றி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் மாவட்ட மைய ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் மாதன் தலைமையில் நடந்தது. கிருஷ்ணகிரி ஆதாரக் கிளை தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். இதில், ஓசூர் கிருஷ்ணப்பா, நந்தகோபால், கிருஷ்ணைய்யா, கதிர்வேலு, மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர் ஜெகந்நாதன் ஆகியோர் பங்கேற்று, சங்க செயல்பாடுகள், மருத்துவ நிதி திரும்பப் பெறுவதில் உள்ள நடைமுறைகள் தொடர்பாக விளக்கினர்.

இக்கூட்டத்தில் குடும்ப ஓய்வூதிய ஆணை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவது குறித்து மாவட்ட கருவூல அலுவலரின் கவனத்துக்கு கொண்டு செல்வது.

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு என ஒதுக்கப்பட்ட மாநில கட்டிட நிதி ரூ.5 லட்சத்தில், மீதம் உள்ள நிலுவைத் தொகையை கிளைகள் மூலம் வசூலிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in