Published : 19 Dec 2020 03:15 AM
Last Updated : 19 Dec 2020 03:15 AM

48 பேருக்கு கரோனா

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 609-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 361-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில். மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 367-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதை யடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,980-ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x