மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் விவசாயி கைது

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் விவசாயி கைது
Updated on
1 min read

ராயக்கோட்டை அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் விவசாயியை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார் அக்ரஹாரத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணன். இவரது மனைவி விஜயசாந்தி (22). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக விஜயசாந்தியின் தாய் முனியம்மா, ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருந்தார்.

திருமணம் ஆகி 5 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்ததால், வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கை தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றிய போலீஸார், கிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் அவரை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓசூர் சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in