Published : 17 Dec 2020 03:17 AM
Last Updated : 17 Dec 2020 03:17 AM
இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று மாலை கோவை வந்தார். அவரை, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு அவர் சென்று, தங்கினார். இன்று (டிச. 17) மாலை 4 மணிக்கு நடைபெறும் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 41-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். 1,385 மாணவர்கள் நேரடியாகவும், 57 பேர் அஞ்சல் மூலமாகவும் பட்டம் பெறுகின்றனர். இந்த விழாவையொட்டி, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT