பூட்டிய வீட்டில் தொழிலாளி உடல் மீட்பு

பூட்டிய வீட்டில் தொழிலாளி உடல் மீட்பு
Updated on
1 min read

திருப்பத்தூர் அடுத்த லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிடத்தொழி லாளி முருகேசன் (48). இவரது மனைவி வெண்ணிலா(44). இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட் டதால் வெண்ணிலா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றார். முருகேசன் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், பூட்டியிருந்த முருகேசனின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனே பொது மக்கள் கந்திலி காவல் நிலை யத்துக்கு தகவல் கொடுத் தனர். அதன்பேரில், காவல் துறையினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது முருகே சன் உடல் அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்தார். உடனே, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in