Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM

அனைத்து தரப்பு மக்களுக்குமான இயக்கம் திமுக கார்த்திகேய சிவசேனாபதி கருத்து

அனைத்து மக்களுக்குமான இயக்கம் திமுக என்று, அக்கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்தார்.

திருப்பூர் மத்திய மாவட்ட திமுக எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று சுற்றுப்பயணம் செய்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

முன்னதாக, திருப்பூர்ரயில் நிலையம் அருகே பெரியார் -அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "கடந்த 10ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழக மக்கள் அனுபவித்த இன்னல்களையும், அதை போக்குவதற்கு திமுக என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டறிந்து, அதை அறிக்கையாக சமர்ப்பிக்க, என்னைப் போன்ற 15 பேரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார்.

அனைத்து கஷ்டங்களுக்கும், 2021-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் முதல்வராக வரும்போது தீர்வு ஏற்படும். தமிழகத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களுக்குமான இயக்கம் திமுக. நீட் தேர்வினால், தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் வட இந்தியர்கள் பலர், நாம் செலுத்தும் வரிப் பணத்தில் படித்து வருகின்றனர். இதை அனைவரும் சிந்தித்து பாா்க்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x