புதுகை மாவட்டத்தில் 50 இடங்களில் மினி கிளினிக்

புதுகை மாவட்டத்தில் 50 இடங்களில் மினி கிளினிக்
Updated on
1 min read

தமிழகத்தில் சுகாதாரத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் திறக்கும் திட்டத்தில் முதல் கட்டமாக 630 மினி கிளினிக்குகள் நேற்று தொடங்கப்பட்டன. இங்கு, மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர் என தலா ஒருவர் பணியில் இருப்பார். காலை 8 மணியில் இருந்து பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் கிளினிக் செயல்படும்.

இத்திட்டத்தை, சென்னையில் தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 50 மினி கிளினிக்குகளில் முதல் கட்டமாக 21 கிளினிக்குகள் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in