காவலர் தேர்வில் முறைகேடு: 2 பேர் கைது

காவலர் தேர்வில் முறைகேடு: 2 பேர் கைது
Updated on
1 min read

கடலூரில் காவலர் தேர்வில் செல்போன் எடுத்துச் சென்று வினாத்தாளை படம் எடுத்து அனுப்ப முயன்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

நெய்வேலி வட்டம் 10-ல்உள்ள ஒரு பள்ளியில் காவலர்தேர்வு எழுதிய கடலூர்அருகே உள்ள ஆலப்பாக்கம்கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் மோகன்ராஜ் (22)என்பவர் தனது உள்ளா டைக்குள் செல்போனை மறைத்து எடுத்து வந்து அதில் கேள்வித்தாளை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் அனுப்ப முயன்றபோது பிடிப்பட்டார். இதேபோல் நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே சேப்ளாநத்தம் கிராமத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் செல்போன் எடுத்து வந்து கேள்வித்தாளை புகைப்படம் எடுத்து அனுப்ப முயன்ற திட்டக்குடி அருகே உள்ள வெண்கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் மகன் வினோத்குமார் (24) என்பவரும் பிடிப்பட்டார். மோகன்ராஜ் மீது நெய்வேலி டவுன்ஷிப் போலீஸாரும், வினோத் குமார் மீது நெய்வேலி மந்தாரக்குப்பம் போலீஸாரும் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in